நாகாலாந்தில் முதல் முறையாக புதிதாக கரோனா பாதிப்பு இல்லை

நாகாலாந்து மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மே 25-ம் தேதிக்குப் பிறகு டிசம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதால் முதல் முறையாக புதிய கரோனா நோயாளி யாரும் கண்டறியப்படவில்லை.
கரோனா வைரஸின் முதல் நாள்
கரோனா வைரஸின் முதல் நாள்
Updated on
1 min read


கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய மே 25-ம் தேதிக்குப் பிறகு டிசம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதால் முதல் முறையாக புதிய கரோனா நோயாளி யாரும் கண்டறியப்படவில்லை.

கரோனா பாதிப்பு தொடக்கம் முதலே குறைவாக இருந்த நாகாலாந்தில், கரோனாவிலிருந்து மீள்வோர் விகிதம் 96.14 சதவீதமாக இருந்தது. இதுவரை 23 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

நாகாலாந்தில் இதுவரை 11,897 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 251 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறாக்ரள். இதுவரை 11,438 பேர் குணமடைந்துள்ளனர். 78 பேர் பலியாகிவிட்டனர் என்று அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக சென்னையிலிருந்து திரும்பிய மூன்று பேருக்கு மே 25-ம் தேதி நாகாலாந்தில் கரோனா உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com