கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேளாண் சட்டங்களால் விவசாயிகள் நசுக்கப்படுகின்றனர்: சரத் பவார்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் நசுக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் (கோப்புப்படம்)
Updated On :29 டிசம்பர் 2020, 2:08 pm

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் நசுக்கப்படுவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை 6-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இதனிடையே இது குறித்து மத்திய அரசை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார். 

விவசாயிகள் தில்லியில் அமர்ந்துகொண்டிருந்தால் விவசாயம் செழுமையாக செயல்படாது. கிராமபுற நிலங்களில் விவசாயிகள் இறங்கி உழைத்தால் மட்டுமே நாட்டின் விவசாயம் செழுமையுடன் இருக்கும். விவசாயிகள் போராட்டத்தில் தீர்வு காண்பதில் மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது.

சரத் பவார் மன்மோகன் சிங் ஆட்சியின்போது வேளாண் சட்டங்களில்  சீர்திருத்தங்களை கொண்டுவர நினைத்ததாகவும், ஆனால் அரசியல் நெருக்கடியால் அதனை கைவிட்டாரென்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் குறியதற்கு அவர் பதிலளித்தார்.

மன்மோகன் சிங் வேளாண் துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர நினைத்தார். ஆனால் இதுபோன்ற விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களுடன் இல்லை என்று கூறினார்.

ஜனநாயகத்தைப் பற்றி பேசும் பாஜக அரசு, வேளாண் சட்டங்களை நிறைவேற்றுவதிலேயே மும்முரம் காட்டுகிறது. மாநில அரசுகளும் விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வுகாணும் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.