சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

கரோனா அறிகுறி: ஹைதராபாத்தில் 10 சீனர்கள் உட்பட 18 பேர் அனுமதி

காய்ச்சல் மற்றும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 10 சீனர்கள் உட்பட 18 பேர் ஹைதராபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :7 பிப்ரவரி 2020, 10:30 am


ஹைதராபாத்: காய்ச்சல் மற்றும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 10 சீனர்கள் உட்பட 18 பேர் ஹைதராபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

18 பேரில் 11 பேர் காந்தி மருத்துவமனையிலும், 7 பேர் ஃபீவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவக் குழுவினர் குறைவாக இருப்பதால், மற்ற மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை வரவழைக்கும் பணியும் நடந்து வருகிறது.

சீனாவில் இருந்து வரும் அனைவருக்குமே கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதில்லை. வூஹானில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. சீனாவின் பிற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.

அவ்வாறு 37 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அனைவருக்குமே நோய் தொற்று இல்லை என்றே தெரிய வந்துள்ளது என மருத்துவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.