கரோனா அறிகுறி: ஹைதராபாத்தில் 10 சீனர்கள் உட்பட 18 பேர் அனுமதி

காய்ச்சல் மற்றும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 10 சீனர்கள் உட்பட 18 பேர் ஹைதராபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா அறிகுறி: ஹைதராபாத்தில் 10 சீனர்கள் உட்பட 18 பேர் அனுமதி
Updated on
1 min read


ஹைதராபாத்: காய்ச்சல் மற்றும் கரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 10 சீனர்கள் உட்பட 18 பேர் ஹைதராபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

18 பேரில் 11 பேர் காந்தி மருத்துவமனையிலும், 7 பேர் ஃபீவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கத் தேவையான மருத்துவக் குழுவினர் குறைவாக இருப்பதால், மற்ற மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்களை வரவழைக்கும் பணியும் நடந்து வருகிறது.

சீனாவில் இருந்து வரும் அனைவருக்குமே கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படுவதில்லை. வூஹானில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படுகிறது. சீனாவின் பிற இடங்களில் இருந்து வருபவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.

அவ்வாறு 37 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், அனைவருக்குமே நோய் தொற்று இல்லை என்றே தெரிய வந்துள்ளது என மருத்துவ அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com