ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள்: நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட நிர்பயாவின் தாய்

நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என்று கூறி நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுதார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி.

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 9:37 am

PTI


புது தில்லி: நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என்று கூறி நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுதார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தில் மத்திய மற்றும் தில்லி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா சார்பில், தனக்காக சட்ட நிவாரணம் பெற்றுத் தர வழக்குரைஞர் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டதை அடுத்து, அவருக்கு சட்ட உதவி வழங்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், 7 ஆண்டுகளாகபோராடிக் கொண்டிருக்கிறேன். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என்று கூறி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி நீதிமன்றத்தில் கதறி அழுதார்.

இதையடுத்து, குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை நிர்ணயிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.