47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல்: ஒருவர் பலி

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். 

News image
Updated On :14 பிப்ரவரி 2020, 10:14 am

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். 

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், இன்று காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் உள்நுழைந்து பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். 

தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.