ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நிர்பயா வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்த நீதிபதி பானுமதி

நிர்பயா குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி திடீரென மயங்கி விழுந்தார்.

News image
Updated On :14 பிப்ரவரி 2020, 9:26 am

PTI


புது தில்லி: நிர்பயா குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பான வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி திடீரென மயங்கி விழுந்தார்.

நிர்பயா குற்றவாளிகளைத் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசின் மனு மீது, முக்கிய உத்தரவுகளை நீதிபதி பானுமதி பிறப்பித்துக் கொண்டிருந்தார். திடீரென அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை உடன் இருந்த நீதிபதிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர் குழு முதலுதவி சிகிச்சை அளித்ததை அடுத்து, அவருக்கு மயக்கம்தெளிந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.