பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலி
தனியார் பள்ளியின் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 4 சிறுவர்கள் பலியாகினர்.


சண்டிகர்: தனியார் பள்ளியின் வேனில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், 4 சிறுவர்கள் பலியாகினர்.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் லாங்கோவால் நகரில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் வேனில் திடீரென தீப்பிடித்தது. அப்போது வேனில் 12 மாணவர்கள் இருந்தனர்.
வேனில் தீப்பிடித்ததும், ஓட்டுநர் தப்பியோடினார். பொதுமக்கள், வேனில் இருந்த 8 சிறுவர்களை மீட்டனர். ஆனால், 4 முதல் 6 வயதுடைய நான்கு சிறுவர்கள் தீவிபத்தில் சிக்கி பலியாகினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...