மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இலங்கையில் முதல் மின்சார ரயில் பாதை அமைக்கத் திட்டம் 

மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் நாட்டின் முதல் மின்சார ரயில் பாதையைக் கண்டியில்

News image
Updated On :27 பிப்ரவரி 2020, 8:10 am

கொழும்பு: மக்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் நாட்டின் முதல் மின்சார ரயில் பாதையைக் கண்டியில் நிர்மாணிக்க இலங்கை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து மாநில போக்குவரத்து அமைச்சர் திலம் அமுனுகாமா கூறியதாவது..

ரயில் பயணத்தைச் சுலபமாக்கவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்காகத் தலைநகர் கொழும்பிலிருந்து 78 கி.மீ தூரத்தில் உள்ள ரம்புக்கனா - கண்டிக்கும் இடையே புதிய மின்சார ரயில் பாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. 

மேலும், இந்த திட்டம் முடிந்ததும் கண்டியின் புறநகரில் உள்ள நவல்பிட்டியாவிற்கு புதிய ரயில் பாதையை விரிவுபடுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தற்போதுள்ள ரயில் பாதைக்கு மேலே கான்கிரீட் தூண்களைப் பயன்படுத்தி முழு திட்டமும் செயல்படுத்தப்படும். இந்தக் கட்டுமான திட்டத்தை ஸ்பெயினில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.