சிரியா வான்வழித் தாக்குதல்: 33 துருக்கி வீரர்கள் பலி

சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 துருக்கி ராணுவ வீரர்கள்
சிரியா வான்வழித் தாக்குதல்: 33 துருக்கி வீரர்கள் பலி
Updated on
1 min read

அங்காரா: சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போா் தொடங்கியதிலிருந்தே அந்நாட்டுக்கும் அண்டை நாடான துருக்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பான்மை பகுதிகளை அரசு ஆதரவுப் படையினர் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள இத்லிப் மாகாணம் அல்-காய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், துருக்கியின் ஹடேய் மாகாணத்தின் இத்லிப் நகரை ஒட்டிய எல்லைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் குறைந்தது 33 துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாக பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான ஆய்வு தெரிவித்துள்ளதாக ஆளுநர் ரஹ்மி தோகன் கூறியுள்ளார். மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக துருக்கிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர் என்றார். 

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் ஆதரவுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக துருக்கி மற்றும் சிரியப் படைகளுக்கு இடையே மோதல்கள் மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com