வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனா வைரஸ்: மத்திய அரசு கட்டுப்பாட்டு அறை திறப்பு, உதவி எண் அறிவிப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அனைத்து விதமான உதவிகளையும் பெற்றுக் கொள்ள மத்திய அரசு உதவி எண் அறிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2020, 7:27 am

DIN

புதுதில்லி: கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான அனைத்து விதமான உதவிகளையும் பெற்றுக் கொள்ள மத்திய அரசு உதவி எண் அறிவித்துள்ளது.

சீனாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள கரோனா வைரஸ் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஒரு கட்டுப்பாட்டு அறையை தொடங்கி இருக்கிறது.

அந்த கட்டுப்பாட்டு அறையின் எண் +91-11-23978046 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் அனைத்து விதமான உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறையும், பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.

மேலும் சீனாவுக்கு அத்தியவாசமற்ற முறையிலான பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.