எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

'நண்பர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்' - பிரேசில் அதிபர் குறித்து பிரதமர் மோடி ட்வீட்

பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

News image
பிரதமர் மோடியுடன் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோ
Updated On :8 ஜூலை 2020, 6:46 am

DIN


பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து, அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார். 

உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கவைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனோரோவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 இந்நிலையில் பிரதமர் மோடி, பிரேசில் அதிபர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

'எனது நண்பர் ஜனாதிபதி ஜெயிர் பொல்சொனோரோ விரைவாக குணமடைய எனது வாழ்த்துக்கள் என்று கூறிய அவர் இச்செய்தியை போர்த்துகீசிய மொழியிலும் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக பொல்சொனோரோ மூன்று முறை கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என வந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை உடல்நிலை சரியில்லாததை தொடர்ந்து அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.