அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சிஸ்டம் சரியில்லை: குஜராத் அமைச்சரின் மகனை கைது செய்த பெண் காவலர் ராஜினாமா

குஜராத் மாநிலம் சூரத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக அமைச்சரின் மகனை கைது செய்த காவல்துறை பெண் காவலர் சுனிதா யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.

News image
சிஸ்டம் சரியில்லை: குஜராத்அமைச்சரின் மகனை கைது செய்த பெண் காவலர் ராஜினாமா
Updated On :16 ஜூலை 2020, 5:12 am

PTI


சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் பொது முடக்க விதிகளை மீறியதாக அமைச்சரின் மகனை கைது செய்த காவல்துறை பெண் காவலர் சுனிதா யாதவ் ராஜினாமா செய்துள்ளார்.

இந்த தகவலை காவல்துறை மூத்த அதிகாரிகள் இதுவரை மறுக்கவில்லை.

பிரகாஷ் கனானி, குஜராத் மாநில நல்வாழ்வுத் துறை இணை அமைச்சர் குமார் கனானியின் மகன். இவரும், இவரது இரண்டு நண்பர்களும் கடந்த ஞாயிறன்று சூரத்தில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் பொது முடக்க விதிகளை மீறியக் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர்.

ஒரு அமைச்சரின் மகனையே விதிமீறல் குற்றத்துக்காகக் கைது செய்த சுனிதா யாதவை சமூக ஊடகங்கள் கொண்டாடி வந்த நிலையில், அவர் தனது பணியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனக்கு எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்காததால், நான் எனது பணியை ராஜினாமா செய்கிறேன். நான் ஒரு காவலராக எனது பணியைத்தான் செய்தேன். இது நமது அமைப்பின் மீதான தவறு, ஒரு அமைச்சரின் மகன் என்றால், அவர்கள் தங்களை மிக மிக முக்கிய நபர்கள் என்று கருதிக் கொள்கிறார்கள் என்று சுனிதா யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், அவரது ராஜினாமாவை சூரத் காவல்துறை ஆணையர் ஆர்.பி. பிரஹ்ம்பத் மறுத்துள்ளார், அவர் ராஜினாமா செய்யவில்லை, விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, இந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

சுனிதா யாதவ், அமைச்சரின் மகன் பொதுமுடக்க விதிகளை மீறி வந்தக் குற்றத்துக்காக கைது செய்யும் போது இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதல் குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளி உலகத்துக்குத் தெரிந்தது. மூன்று பேரும் பிறகு பெயிலில் விடுதலை செய்யப்பட்டனர்.

சுனிதா யாதவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பரவலாக கருத்துகளும் பகிரப்பட்டது. பெண் சிங்கம் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.