நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா நியமனம்

இந்தியாவின் பணக்கார பெண்ணான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :17 ஜூலை 2020, 10:14 am

இந்தியாவின் பணக்கார பெண்ணான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக, அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் அவரது மகள் ரோஷ்னி நாடார் பொறுப்பேற்கிறார். அதே நேரத்தில் ஷிவ் நாடார்  நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை வியூக அதிகாரியாகவும் தொடருவார் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

38 வயதான ரோஷ்னி மல்ஹோத்ரா, முன்னதாக ஹெச்.சி.எல். கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும், தொழில்நுட்ப வாரியத்தின் துணைத் தலைவராகவும், சிவன் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். தற்போது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்த்தப்பட்டுள்ளார். 

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 'உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலில் 2017 முதல் 2019 வரை இடம்பெற்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.