நாட்டின் பாதுகாப்பைவிட மிகப்பெரிய வேலை எதுவும் இல்லை என ரஃபேல் போர் விமானங்கள் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இன்று பிற்பகல் ஹரியாணா மாநிலம் அம்பாலாவை வந்தடைந்தன. இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப் படையின் 2 சுகோய் போர் விமானங்கள் வரவேற்று அழைத்து வந்தன. மேலும், விமானப்படைத் தளத்தில் ரஃபேல் விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், அம்பாலா விமானப்படைத் தளத்தில் ரஃபேல் விமானங்கள் தரையிறங்கும் விடியோவைப் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, தேசத்தைப் பாதுகாப்பதை விட பெரிய நற்பண்பு எதுவும் இல்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தேசத்தைப் பாதுகாப்பதைவிட மிகப்பெரிய வேலை எதுவும் இல்லை என்று சம்ஸ்கிருத மொழியில் பதிவிட்டுள்ளார்.