ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் திரள வேண்டாம்: ராமஜென்மபூமி அறக்கட்டளை வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் திரள வேண்டாம் என ராமஜென்மபூமி அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :29 ஜூலை 2020, 11:04 am

DIN

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் திரள வேண்டாம் என ராமஜென்மபூமி அறக்கட்டளை கேட்டுக்கொண்டுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருக்கிறார். 

இந்நிலையில், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் மக்கள் அதிகம் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ராமஜென்மபூமி அறக்கட்டளை, 'தற்போது கரோனா பரவல் காரணமாக விழாவில் மக்கள் திரள வேண்டாம். அடிக்கல் நாட்டு விழா முழுவதும் தொலைக்காட்சி மற்றும் இணையத்தில் நேரலை செய்யப்படும். எனவே, மக்கள் வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் காணலாம். 

மேலும், நட்சத்திரத்தின்படி, ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஆகஸ்ட் 3 அல்லது 5 ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆகஸ்ட் 5 ஆம் தேதி எனத் திட்டமிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.