மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

50% மாணவர்களுடன் ஜூலையில் பள்ளிகள் திறப்பு: ஹரியாணா அமைச்சர் தகவல்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஜூலை மாதத்தில் பள்ளிகளை பரிசோதனை முறையில்

News image
Updated On :4 ஜூன் 2020, 7:31 am


கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஜூலை மாதத்தில் பள்ளிகளை பரிசோதனை முறையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ஹரியாணா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.

முதலில் 10 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிறகு 6 - 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்பள்ளிகள் திறக்கப்படும்.

சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் 50% மாணவர்களுடன் பள்ளிகள் இயங்கும். உதாரணமாக 30 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் காலையிலும், 15 மாணவர்கள் மதியத்திலும் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

பரிசோதனை முயற்சியாக முதலில் 4 முதல் 5 பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.