மாணவர்களுக்கு ஓஆர்எஸ், தடையற்ற மின்சாரம் போன்ற வெப்ப அலைத் திட்டத்தை தில்லி முதல்வர் ரேகா குப்தா திங்கள்கிழமை (ஏப்.27) அறிவித்துள்ளார்.
அனைத்துத் துறைகளுடனும் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஓஆர்எஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கல்வித் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், கட்டுமானத் தொழிலாளர் போன்ற அனைத்து வெளிப்பணித் தொழிலாளர்களும் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை வேலையில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தொழிலாளர் துறையிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
மின்சாரம் மற்றும் தண்ணீர் தடையின்றி விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து டிடிசி பேருந்துகளிலும் பயணிகள் அருந்துவதற்காக குடிநீரை வைக்குமாறு, போக்குவரத்துத் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
தற்போது ஏற்படக்கூடிய வெப்ப அலையைச் சமாளிக்க தில்லி அரசு முழுமையாகத் தயாராக உள்ளது என்றும், மக்கள் எந்தவித சிரமங்களையும் சந்திக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.
Summary
Delhi Chief Minister Rekha Gupta announced a heatwave action plan for students including provisions such as ORS and uninterrupted power supply on Monday (April 27).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

தொடர் தோல்விகளால் பிளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழக்கும் தில்லி!

புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்

வெப்பஅலை மேலாண்மைக்காக நோடல் அதிகாரிகள் நியமனம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


