ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், நாளுக்கு நாள் பாதிப்பும், பலியும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
அந்தவகையில், ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குத் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 2,781 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிக்கப்பட்ட 1,167 பேர் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மேலும், 1,604 பேர் இந்த நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இந்த மாநிலத்தில் கரோனாவுக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.