தாராவியில் மேலும் 2 பேர் கரோனாவுக்கு பலி

தாராவியில் மேலும் 2 பேர் கரோனாவுக்கு பலி

​தாராவியில் புதிதாக 20 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on


தாராவியில் புதிதாக 20 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அங்கு புதிதாக 20 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,984 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா தொற்றால் பாதித்தோரில் மொத்தம் 995 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 914 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com