அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்: சோனியா காந்தி

இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது பற்றியும் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது பற்றியும் பிரதமர் நாட்டு மக்களிடம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :17 ஜூன் 2020, 11:13 am

DIN


இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது பற்றியும் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது பற்றியும் பிரதமர் நாட்டு மக்களிடம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் இன்று (புதன்கிழமை) பேசியதாவது:

"20 ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. வீரமரணமடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மனதின் ஆழத்திலிருந்து அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களது குடும்பத்தினர் இந்தத் துயரத்தை எதிர்கொள்வதற்கான வலிமையைப் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

இந்தச் சம்பவம் தொடர்பாக நாடே இன்று கொந்தளிப்பில் இருக்கும் நிலையில், இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது பற்றியும் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது பற்றியும் பிரதமர் நாட்டு மக்களிடம் உண்மையைத் தெரிவிக்க வேண்டும். அங்கு இன்றைய நிலவரம் என்ன?

நமது ராணுவ வீரர்கள், அதிகாரிகள் யாரேனும் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போயுள்ளனரா? எத்தனை வீரர்கள்/அதிகாரிகள் படுகாயமடைந்துள்ளனர்? எந்தெந்தப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது? இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள அரசின் கொள்கை என்ன? இந்த நெருக்கடியான நிலையில், இந்திய ராணுவத்துடனும், ராணுவ வீரர்களுடனும், அவர்களது குடும்பத்தினருடன், அரசுடனும் காங்கிரஸ் துணை நிற்கிறது."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.