வாராணசி: கங்கை நதியில் படகுச் சேவை மீண்டும் தொடங்கியது

கரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கங்கை நதியில் இன்று படகுச் சேவை மீண்டும் தொடங்கியது.
வாராணசி: கங்கை நதியில் படகுச் சேவை மீண்டும் தொடங்கியது


கரோனா தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கங்கை நதியில் இன்று படகுச் சேவை மீண்டும் தொடங்கியது.

பொதுமுடக்கக் காலத்தில் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வந்த படகோட்டிகள், இன்று படகுச் சேவை தொடங்கியதால் மகிழ்ச்சியோடு தங்கள் படகுகளை எடுத்துக் கொண்டு கங்கை நதியில் சென்றனர்.

படகுச் சேவையைத் தொடங்க அனுமதி வழங்கியுள்ள போதும், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்திருப்பதால் பல படகுகள் கரையிலேயே நின்றிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com