கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் அமலில் உள்ள பொது முடக்கம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:
"தலைவர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இறுதியாக ஜூலை இறுதிவரை தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது."