குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் நாட்டில் உள்ள அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்காமல் நரேந்திர மோடி அரசு ஓயாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசுகையில்,
"2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். எதிர்க்கட்சிகள் சிறுபான்மையினரை அச்சுறுத்துகின்றன. சிஏஏ குடியுரிமையை வழங்க மட்டுமே செய்யும், யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்பதை சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருக்கும் நான் உறுதியளிக்கிறேன். உங்களது குடியுரிமையை அது பாதிக்காது.
அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமையை வழங்காமல் நாங்கள் ஓயமாட்டோம்" என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தில்லி ஷகீன்பாக், சென்னை வண்ணாரப்பேட்டை என நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் அமைதிப் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


