கரோனா தொற்று பரவல் காரணமாக முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிகக் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற மத்திய நல்வாழ்வுத் துறையின் அறிவுரைப்படி, உச்ச நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, கரோனா வைரஸ் பரவல் காரணமாக, உச்ச நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் செயல்படாது, முக்கிய வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே செயல்படும் என்று உச்ச நீதிமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது.