மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மேற்கு வங்கத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதி

மேற்கு வங்கத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :26 மார்ச் 2020, 6:57 am

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவத் தொடங்கியுள்ள சூழலில் அதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. நாடு முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கெனவே ஒருவர் பலியாகியுள்ள நிலையில், மேலும் ஒருவருக்குப் புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கிழக்கு பெருநகர பைபாஸுக்கு அருகிலுள்ள நயாபாத்தில் வசிக்கும் இவர் காய்ச்சல் இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளால் கடந்த திங்கள்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார். 

மேலும், இவரது ரத்த மாதிரிகளைச் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் சர்வதேச பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை என்றாலும், சமீபத்தில் மிட்னாபூரில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்றுள்ளார். இவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.