விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஔரங்காபாத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி

ஔரங்காபாத்தில் கரோனாவுக்கு 47 வயது நபர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி

News image
Updated On :1 மே 2020, 8:15 am

ஔரங்காபாத்தில் கரோனாவுக்கு 47 வயது நபர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர் கார்கேடா, குருதுத் நகரைச் சேர்ந்தவராவர். இருமல், காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில், கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தகவல்படி,  
மகாராஷ்டிராவில் மொத்தம் 10,498 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 1,773 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 459 பேர் கொடிய வைரஸுக்கு பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.