விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது: பிரகாஷ் ஜாவடேகர்

இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

News image
Updated On :2 மே 2020, 8:01 am

புது தில்லி: இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று மத்திய இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரகாஷ் ஜாவடேகர், இந்தியாவுக்கு தற்போது மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வெறும் 2 செல்லிடப்பேசி தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது இந்தியாவில் 150 தொழிற்சாலைகள் உள்ளன. அவ்வளவு ஏன், தற்போது தற்காப்பு கவசங்கள், வென்டிலேட்டர்களைக் கூட நாம் உற்பத்தி செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.