புது தில்லி: சுமார் 40 நாட்களுக்குப் பிறகு நாடு முழுவதும் பரவலாக இன்று பல்வேறு மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. கட்டுக்கடங்காத கூட்டத்தால் மதுபானக் கடைகள் திக்குமுக்காடின.
இந்த நிலையில், தேசிய தலைநகர் தில்லியில், மதுபானக் கடைகளில், நீண்ட வரிசையில் நின்று குடிமக்கள் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.
ஆனால், சமூக இடைவெளியைப் பின்பற்றாத காரணத்தால், முன்னெச்சரிக்கை காரணமாக, தில்லியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே, கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், காவல்துறையினரே கடைகளை மூடிவிட்டனர்.
காலை 9 மணி முதல் மாலை 6.30 வரை மதுபானக் கடைகளைத் திறக்க அரசு அனுமதித்திருந்தது. ஆனால், அரசு மதுபானக் கடைகள் மட்டுமே திறக்க அனுமதி அளித்திருப்பது குறித்து பெரும்பாலான மக்களுக்குத் தெரியவரவில்லை.
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கிழக்கு தில்லியின் மயூர் விஹார் பகுதியில் திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில இடங்களில் கூட்டத்தைக் கலைக்க லேசான தடியடியும் நடத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 4 ஆஸ்திரேலியா செல்கிறாரா விஜய்? ஆதவ் அர்ஜூனா விளக்கம்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளர் இல்லத்திற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரர் காயம்

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


