புது தில்லி: தில்லியில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது குறித்து பொதுமக்கள் மற்றும் நிபுணர்களிடம் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை கேட்டிருந்தார்.
இந்த நிலையில் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான பரிந்துரைகள் வந்திருப்பதாக அரவிந்த் கேஜரிவால் இன்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், தில்லியில் சந்தைகள் உள்ளிட்டவற்றை திறக்க உத்தரவிட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. மேலும், கடைகளை பாதிப் பாதியாகப் பிரித்து ஒருநாள் விட்டு ஒரு நாள் திறக்கும் வகையில் திட்டங்களை வகுக்கவும் யோசனை கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் கொடுத்திருக்கும் யோசனை குறித்து இன்று மாலை 4 மணியளவில் மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் மற்றும் துணைநிலை ஆளுநருடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தில்லியில் எந்த அளவுக்கு தளர்வு அறிவிக்கப்படலாம் என்பது குறித்து மத்திய அரசக்கு பரிந்துரை அனுப்புவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரைவில் நிறைவடைகிறது டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்!

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


