ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல்: உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி 

விவசாயிகளிடம் இருந்து அவர்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை நேரடிக் கொள்முதல் செய்யும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 மே 2020, 11:09 am

DIN


விவசாயிகளிடம் இருந்து அவர்கள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களை நேரடிக் கொள்முதல் செய்யும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில், வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடங்களுக்கும், கொள்முதல் செய்யப்படும் இடங்களுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குறைத்து, வேளாண் பொருட்களை நேரடிக் கொள்முதல் செய்யும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம்.

குறுகிய கால பயிர் சாகுபடியை ஊக்குவிக்க கவனம் செலுத்தும் அதே நேரத்தில், வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் நீண்ட கால திட்டங்களிலும் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

கொள்முதல் நிலைய உள்கட்டமைப்பை உருவாக்குதல், குளிர்பதனக் கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.

இந்த நிதி உடனடியாக விடுவிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.