புது தில்லி: மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பொது நலன் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசின் முடிவுகள் சார்ந்த விஷயம் என்பதால், மதுக்கடைகள் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுக்கடைகளை தற்காலிகமாக மூட உத்தரவிடக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, வழக்குத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்று கூறி மதுக்கடைகளை மூட உத்தரவிடக் காரி இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.