ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

News image
தாராவி (கோப்புப்படம்)
Updated On :16 மே 2020, 4:15 pm

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 1,606 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் 67 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 30,706 ஆக உயர்ந்துள்ளது. இதில் 22,479 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை மொத்தம் 1,135 பேர் பலியாகியுள்ளனர். இன்று ஒரே நாளில் மட்டும் 524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய தேதியில் மொத்தம் 7,088 பேர் குணமடைந்துள்ளனர்.

மும்பை:

மும்பையில் புதிதாக 884 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 18,396 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 238 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,806 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 696 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

தாராவியில் இன்று புதிதாக 53 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,198 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.