மும்பையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 57 வயது காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக மும்பை காவல்துறையினர் தெரிவித்தனர்.
கரோனாவால் பலியானவர் மதுகர் மானே என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்துத் துறையில் காவலராக பணியாற்றி வந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், 15 நாட்கள் விடுப்பில் சென்றிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
மதுகர் மானே (57) மறைவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மும்பை காவல்துறை வருத்தம் தெரிவித்துள்ளனர். அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரின் குடும்பத்துக்காக நாங்கள் பிராத்தித்து கொள்கிறோம் என்று மும்பை காவல்துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.
மும்பையில் ஏழு மற்றும் சோலாப்பூர், நாசிக் மற்றும் புணேவில் தலா ஒருவர் என மகாராஷ்டிராவில் இதுவரை, 10 காவலர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரைவில் நிறைவடைகிறது டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடர்!

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


