மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஏழை மக்களுக்குத் தேவை பணம்தான்; கடன் அல்ல: பிரதமருக்கு ராகுல் கோரிக்கை

ஏழை மக்களின் இன்றைய தேவை பணம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

News image
Updated On :16 மே 2020, 7:03 am


புது தில்லி; ஏழை மக்களின் இன்றைய தேவை பணம்தான் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

காணொலி காட்சி மூலம் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் உரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், ஏழை மக்கள் தற்போதிருக்கும் சூழ்நிலையில் நிதியுதவியைத் தான் எதிர்பார்க்கிறார்கள். கடனை அல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று ஏழை மக்களுக்குத் தேவையானது பணம்தான். எனவே, பிரதமர் நரேந்திர மோடியை நான் வேண்டிக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் தயவு கூர்ந்து சிறப்பு திட்டத்தை மாற்றியமையுங்கள். 

ஏழை மக்களுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேரடியாக பண உதவி வழங்க வேண்டும். அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துங்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து பிரதமர் பரிசீலிக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் தற்போதைய நிலை இதயத்தை நொறுங்க வைப்பதாக உள்ளது. விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துங்கள். அவர்கள்தான் நமது நாட்டின் எதிர்காலம் என்றும் ராகுல் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.