வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜம்மா மசூதிக்கு அருகே தில்லி காவல்துறை கொடி அணிவகுப்பு

தில்லியில் உள்ள ஜம்ம மசூதிக்கு அருகே தில்லி காவல்துறையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

News image
Updated On :22 மே 2020, 9:03 am

ANI


தில்லியில் உள்ள ஜம்ம மசூதிக்கு அருகே தில்லி காவல்துறையினர் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மேலும், ரமலான் நோன்பிருக்கும் முஸ்லிம் மக்கள் அனைவரும், நாடு முழுவதும் கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் அவரவர் இல்லங்களிலேயே தொழுகையை நடத்துமாறும் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி வாயிலாக வலியுறுத்தினர்.

ரமலான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஏராளமான முஸ்லிம் மக்கள் மசூதிக்கு வந்து தொழுகை நடத்துவது வழக்கம் என்பதால், இன்றைய தினம் முன்னெச்சரிக்கையாக தில்லி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தி, இப்பகுதியை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்தனர்.

Story image

மேலும், முஸ்லிம் மக்கள் மசூதிக்கு வருவதைத் தவிர்க்கும் பொருட்டு ஒலிப்பெருக்கி வாயிலாகவும் கோரிக்கையை முன்வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.