மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சீனப் படைகள் குவிப்பு; லடாக் எல்லையில் படைப்பலத்தை அதிகரித்தது இந்தியா

லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்துள்ள நிலையில், இந்திய ராணுவமும் அதற்கேற்ப படைப்பலத்தை அதிகரித்துள்ளது.

News image
Updated On :25 மே 2020, 9:51 am


புது தில்லி: லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே பல்வேறு இடங்களில் சுமார் ஐந்து ஆயிரம் படை வீரர்களை சீனா குவித்துள்ள நிலையில், இந்திய ராணுவமும் அதற்கேற்ப படைப்பலத்தை அதிகரித்துள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அப்பால் சீனப் படை வீரர்கள் மிகப்பெரிய அளவில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சீன ராணுவம், வீரர்களுடன், ராணுவ தளவாடங்களையும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிலை நிறுத்தியிருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

கல்வான் நலா பகுதியில் இந்தியா ராணுவ நிலைக்கு அருகே சீன ராணுவ வீரர்கள் தற்காலிக குடில்கள் அமைத்து தங்கியுருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் சீனா சார்பில் சாலைகள் அமைப்பது போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கு இந்தியா தரப்பில் கடும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டும், அந்த நடவடிக்கைகளை சீனா நிறுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.