எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்படலாம்: கோவா முதல்வர்

பொது முடக்கம் மேலும் இரு வாரங்கள் நீட்டிக்கப்படலாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 மே 2020, 7:35 am

DIN

பொது முடக்கம் மேலும் 15 நாள்கள் நீட்டிக்கப்படலாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், நாளை மறுநாள்(மே 31) பொது முடக்கம் முடிவடைய உள்ள நிலையில், ஐந்தாம் கட்டமாக ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், 'மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நான் தொலைபேசியில் பேசினேன். மேலும் இரு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கூறினேன்.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப, நாடு முழுவதும் மேலும் 15 நாள்களுக்கு பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம். எவ்வாறாயினும், சில தளர்வுகள் இருக்க வேண்டும் என்பதும் எங்கள் கோரிக்கை. உணவகங்களை 50 ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்க வேண்டும். உடற்பயிற்சிக் கூடங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.