ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்பட மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக 4-ஆம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் நாளையுடன் நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பற்றிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதில் ஜூன் 8-ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், திரையரங்குகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை. நிலைமைக்கேற்ப திரையரங்குகள் திறப்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள் செயல்படத் தொடங்கினாலும், அங்குள்ள திரையரங்குகள் திறக்கப்படாது.