புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தீபாவளி: பட்டாசு வெடிக்க மும்பை மாநகராட்சி தடை

மும்பையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க மும்பை மாநாகராட்சி தடை விதித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நேக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

News image

தீபாவளி: பட்டாசு வெடிக்க மும்பை மாநகராட்சி தடை

Updated On :9 நவம்பர் 2020, 10:14 pm

DIN

மும்பை: மும்பையில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடிக்க மும்பை மாநாகராட்சி தடை விதித்துள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நேக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

‘பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசால், கரோனா நோயாளிகளுக்கு சுவாசப் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும்’ என்று மகாராஷ்டிர மாநில அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த சுற்றறிக்கையை மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இருந்தபோதும், நவம்பா் 14-ஆம் தேதி கொண்டாடப்படும் லட்சுமி பூஜை நாளில் மட்டும் அவரவா் சொந்த இடங்களில் மத்தாப்பு போன்ற மிதமான வெடிகளை மட்டும் வெடித்துக்கொள்ள மும்பை மாநகராட்சி அனுமதித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்கள் பெரும் தொற்றுநோய் சட்டத்தின் கீழ் எடுத்துள்ள நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே, கரோனா பரவும் அச்சுறுத்தல் காரணமாக தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க மும்பையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடைபெற்ற மாநில கரோனா தடுப்பு குழு ஆய்வுக் கூட்டத்தில், கரோனா இரண்டாம் அலைக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில், ‘இந்த அச்சுறுத்தல் நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பது, நுரையீரல் பாதிப்பை மேலும் அதிகமாக்க செய்ய வாய்ப்புள்ளது. எனவே, அதைத் தவிா்ப்பது நல்லது’ என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ராஜேஷ் தோப் ஆலோசனை தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.