இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

பாகிஸ்தானில் ஆட்டோ கால்வாயில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் ஆட்டோ நிலைதடுமாறி கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் வண்டியில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர் என்று மீட்பு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

News image

20 people killed in accident in Pak

Updated On :11 நவம்பர் 2020, 7:37 am

PTI

வடமேற்கு பாகிஸ்தானில் ஆட்டோ நிலைதடுமாறி கால்வாயில் கவிழ்ந்து விழுந்ததில் வண்டியில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர் என்று மீட்பு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

கைபர் பக்துன்க்வா (கே.பி.கே) மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மூன்று சக்கர வாகனத்தில் 20 பேர் கொண்ட குழுவினர் திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது வாகனம் திடீரென நிலைதடுமாறி அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். கால்வாயிலிருந்து அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் மூன்று பேர் உயிருடன் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்த விபத்து குறித்து கே.பி.கே முதல்வர் மெஹ்மூத் கான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.