தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

உ.பி.யில் நவ.23 முதல் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் திறப்பு

உத்தரப்பிரதேசத்தில் தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News image

உ.பி.யில் நவ.23 முதல் கல்லூரிகள் திறப்பு

Updated On :18 நவம்பர் 2020, 6:32 am

DIN

உத்தரப்பிரதேசத்தில் தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி முதல் மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நவம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் 50 சதவீத மாணவர்களுடன் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு புதன்கிழமை வெளியிட்டது.அதன்படி முகக்கவசங்களை அணிவது, கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல் மற்றும் வைரஸ் பரவாமல் தடுக்க தனிமனித இடைவெளியை கடைபிடித்தல் ஆகியவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கல்வி நிலையங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.