அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அசாம் வெள்ளத்தில் வீடிழந்த கலைஞருக்கு வீடு: காதி, கிராம தொழில்கள் ஆணையம் உதவி

வட கிழக்கு மாநிலமான அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீடிழந்த கலைஞர் ஒருவருக்கு காதி, கிராம தொழில்கள் ஆணையம் வீடு வழங்கி உதவியுள்ளது. 

News image
Updated On :26 நவம்பர் 2020, 12:52 pm

DIN

வட கிழக்கு மாநிலமான அசாமில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீடிழந்த கலைஞர் ஒருவருக்கு காதி, கிராம தொழில்கள் ஆணையம் வீடு வழங்கி உதவியுள்ளது. 

அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதான நிரு கலிதா, பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு வீட்டை இழந்து மிகவும் அவதியுற்றார். இந்த நிலையில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது. கலைஞர்களுக்கு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் நிரு கலிதாவுக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

காதி கலைஞரான நிரு கலிதா, கடந்த 15 ஆண்டுகளில் பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 14 முறை தமது இருப்பிடத்தை மாற்றியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் வினய் குமார் சக்சேனா, கலைஞர்களுக்கு வாழ்வாதாரங்களை உருவாக்கித் தருவதுடன், அவர்கள் தொழில் புரிய ஏதுவான சூழலை ஏற்படுத்தி, அதன் மூலம் உற்பத்தியை அதிகரிக்கவும் ஆணையம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வட கிழக்கு மாகாணத்தில் காதி கலைஞர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் இதுவரை 411 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.