மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசா: அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக இணைய சேவை

ஒடிசாவில் வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் அதிவேக இணைய சேவையை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :7 அக்டோபர் 2020, 10:36 am

DIN

ஒடிசாவில் வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து பஞ்சாயத்துகளிலும் அதிவேக இணைய சேவையை வழங்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. 

ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் ஆசித் திரிபாதி தலைமையில் கிராம மேம்பாட்டுக் குழுவுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டாம் கட்ட பாரத் நெட் திட்டத்தை விரைவாக செயல்படுத்தவும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் இணைப்பு வழங்கவும் தலைமைச் செயலாளர் திரிபாதி உத்தரவிட்டார்

இணைய வசதி மூலம் டிஜிட்டல் சேவைகளை துரிதப்படுத்துவதால் மாநில வளர்ச்சி அதிகரிக்கும் என்றும், இணைய சேவையை அனைவரும் பயன்படுத்தும் வகையில் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், வங்கிகளில் இலவச வைபை (wifi) வசதியை விரைவில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் தெரிவித்தார். 


கிராமங்களுக்கு இணைய சேவையை வழங்கும் விதமாக ஏற்கனவே 22, 541 கிலோமீட்டர் தூரம் வரை ஆப்டிகல் பைபர் கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கேபிள்கள் அமைத்து 27,610 கிலோமீட்டருக்கு ஆப்டிகல் பைபர் கேபிள்கள் அமைக்கும் இலக்கு எட்டப்படும் என்று மின்னணுத்துறை செயலாளர் மனோஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். 

ஒடிசாவில் உள்ள 230 மண்டங்களை சேர்ந்த 4651 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய சேவை வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.