ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிகார் தேர்தலில் கூட்டணியா?: சிவசேனா விளக்கம்

பிகார் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

News image
சஞ்சய் ரௌத்
Updated On :13 அக்டோபர் 2020, 8:21 am

DIN

பிகார் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ல் தொடங்கும் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரெளத் எதிர்வரும் பிகார் சட்டமன்றத் தேர்தலில் சிவசேனா 50 இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருந்த நிலையில், கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். 

அடுத்த வாரம் பாட்னா செல்ல உள்ளதாக தெரிவித்த சஞ்சய் ரெளத், அங்கு மாநிலக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிகாரில் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.