வடக்கு காஷ்மீரில் சாலை விபத்து: சிஆர்பிஎஃப் வீரர் பலி, இருவர் காயம்

வடக்கு காஷ்மீரின், பந்திபோராவில்  மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
CRPF jawan killed, two injured in north Kashmir accident
CRPF jawan killed, two injured in north Kashmir accident
Updated on
1 min read

ஸ்ரீநகர்: வடக்கு காஷ்மீரின், பந்திபோராவில்  மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், இரண்டு பேர் காயமடைந்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

சிஆர்பிஎஃப் வீரர்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் ஒன்று பந்திபோராவில் உள்ள நாசு சாலையில் நிலை தடுமாறி கீழே சரிந்துள்ளது. 

இந்த விபத்தில், ஒருவர் பலியாகியுள்ளார், மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதுதொடர்பாக அந்தப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com