மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசா: இடைத்தேர்தல் பணியாளர்களுக்கு கரோனா கவச உடை அவசியம்

ஒடிசாவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு பணியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்துடன், கரோனா தடுப்பு பெட்டகத்தையும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :16 அக்டோபர் 2020, 5:59 am

DIN

ஒடிசாவில் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு பணியாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்துடன், கரோனா தடுப்பு பெட்டகத்தையும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒடிசாவில் நவம்பர் 3-ஆம் தேதி இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கரோனா பரவல் ஒடிசாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் நடத்தப்படுகிறது.

அந்தவகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட மற்ற உபகரணங்களுடன் வாக்குப்பதிவு பணியாளர்கள்  கரோனா தடுப்புப்   பெட்டகத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி எஸ்.கே.லோஹானி தலைமையில் தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையம் விதித்துள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தேர்தல் பணியாளர்களுக்கு வாக்குச்சாவடிகளை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்குப்பதிவு பணியாளர்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி, கவச உடை உள்ளிட்டவை அடங்கிய கரோனா தடுப்பு பெட்டகம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.