காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ஹாத்ரஸ்: சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நிறைவு 

சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ஹாத்ரஸ் வழக்குக் குறித்த விசாரணையை நிறைவு செய்திருப்பதாகவும், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்

News image
ஹாத்ரஸ்: சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணை நிறைவு 
Updated On :16 அக்டோபர் 2020, 11:14 am

ANI


ஹாத்ரஸ்: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ஹாத்ரஸ் வழக்குக் குறித்த விசாரணையை நிறைவு செய்திருப்பதாகவும், விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை, முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தங்களது விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த 7-ம் தேதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய நிலையில், மேலும் 10 நாள்கள் அவகாசம் அளித்து யோகி ஆதியத்நாத் உத்தரவிட்டதை அடுத்து, இன்று விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் கிராமத்தில் 19 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான சம்பவம் குறித்து விசாரனை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து செப்டம்பர் 30-ம் யோகி ஆதித்ய நாத் உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.