ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

காபூலில் 10 நாள்களில் குற்றம் தொடர்பான சம்பவங்களில் 14 பேர் பலி

கடந்த 10 நாள்களில் காபூலில் நடந்த குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

News image

14 killed in crime-related incidents in Kabul in 10 days

Updated On :17 அக்டோபர் 2020, 10:52 am

ANI

கடந்த 10 நாள்களில் காபூலில் நடந்த குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட டோலோ நியூஸ் கணக்கெடுப்பில் பலியான 14 பேரில் ஐந்து பேர் ராணுவ வீரர்கள் என்று தெரியவந்துள்ளது.

கடந்த 10 நாள்களில் ஆப்கன் தலைநகரில் 20 குற்றம் தொடர்பான சம்பவங்களும், 3 வெடிகுண்டு தாக்குதலும் நடந்துள்ளன. 

காபூல் மற்றும் நாட்டின் பிற பெரிய நகரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாதுகாப்புப் பணியாளர்களை ஒருங்கிணைப்பதற்கான பாதுகாப்புத் திட்டம், பாதுகாப்பு சாசனம் ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானித்ன் பிரதமர் அஷ்ரப் காணி, நகரத்தில் நடைபெறும் குற்ற வழக்குகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காபூலில் வெவ்வேறு குற்றங்கள் தொடர்பாகக் கடந்த 10 நாள்களில் 500 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.