ஒடிசாவில் ஒரேநாளில் 1,480 பேருக்குத் தொற்று: 2,071 பேர் குணம்
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,480 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Odisha's COVID-19 tally reaches 2,82,695 with 1,480 new cases, 14 fatalities

Odisha's COVID-19 tally reaches 2,82,695 with 1,480 new cases, 14 fatalities
ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,480 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,480 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,82,695-ஆக அதிகரித்துள்ளது.
இதில் கரோனா தொற்றால் 17,281 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை நோற்று பாதித்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2,64,102-ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரேநாளில் 2,071 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
புதிதாக 14 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,259-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...