யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரிபுராவில் 9 நெடுஞ்சாலைத் திட்டங்கள்: அடிக்கல் நாட்டினார் நிதின்கட்கரி

திரிபுராவில் ரூ.2,752 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

News image
திட்டத்திற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Updated On :27 அக்டோபர் 2020, 12:06 pm

DIN

திரிபுராவில் ரூ.2,752 கோடி மதிப்பிலான 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அடிக்கல் நாட்டினார்.

திரிபுராவில் 262 கிமீ தூர நீளமுள்ள 9 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின்கட்கரி அடிக்கல் நாட்டி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கட்கரி, கடந்த ஆறு ஆண்டுகளில் திரிபுராவில் கிட்டத்தட்ட 300 கி.மீ சாலைகள் தேசிய நெடுஞ்சாலையுடன் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் திரிபுராவில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள சாலைகள் கட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்த கட்கரி, ஃபெனி பாலம் மற்றும் உதய்பூர்-அகர்தலா சாலை ஆகிய இரண்டு முக்கியமான திட்டங்களும் விரைவில் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.